கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்யக்கோரி இந்து சமுதாய ஒற்றுமை மையத்தினர் உண்ணாவிரதம்


கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும், இந்து இயக்க தலைவர்கள் கொலை செய்யப்படுவதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்து சமுதாய ஒற்றுமை மையம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் வானதிசீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு இந்து இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்வதாகவும், இந்து இயக்கத் தலைவர்கள் கொலை சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, இதுவரை நடைபெற்றுள்ள பெரும்பாலான சம்பவங்களில் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும், கோவில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது குறித்து பல முறை வலியுறுத்தியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், லவ்ஜிகாத் என்ற பெயரில் இந்து இயக்க பெண்களை குறிவைத்து ஏமாற்றும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...