டிசம்பர் இறுதிக்குள் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமருக்கு தூக்கு கயிறு அனுப்ப வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா முடிவு



கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் டிசம்பர் இறுதிக்குள் தற்போது நிலவும் பண பிரச்சனை தீராவிட்டால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிறு அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தை வெள்ளியன்று (இன்று) மாலை வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொது மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம் வாசல்களிலும் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதாக குற்றம்சாட்டினர்.

பெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட 7 லட்சம் கோடி பணம் வாராக்கடனால் பாதிக்கப்பட்டுள்ள தேசிய வங்கிகளை காப்பாற்றவே மத்திய அரசு இந்த நடவடிக்கையினை எடுத்து இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் டிசம்பர் இறுதிக்குள் சரியாகிவிடும் என பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாகவும், பணப்பிரச்சனை டிசம்பர் இறுதிக்குள் தீரவில்லை என்றால் பிரதமர் மோடிக்கு தூக்குக் கயிற்றை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் தமிழக பொதுச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் சமரசப் படுத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...