சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் சார்பில் ஓவியப் போட்டி

சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கோவையில் அமைந்துள்ள ஒரு முன்னணி கட்டிட வடிவமைப்பு கல்லூரி ஆகும். இதன் சார்பாக 5ம் ஆண்டு ''சித்திரம் 2016'' என்னும் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தியாவின் விழாக்கள் என்னும் தலைப்பில் வரும் நவம்பர் 22ம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை அக்கல்லூரி வளாகத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்குபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான சிறப்பு விருந்தினராக கலை ஹவுஸ் செயல்திட்ட மேலாளர் பிரிஜெட் சிபு பங்குபெற உள்ளார். சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சரின் நிறுவனர் ஆர்.சுவாமிநாதன், அவரது மனைவி ராஜலட்சுமி சுவாமிநாதன், அரங்காவலர் சுச்சி ராஜ்தீபன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பேராசிரியர் முகமது அலி சாரிப் இப்போட்டிக்கு தலைமை தாங்க உள்ளார்.

மாணவர்களின் படைப்புகள் நிபுனர் குழுவால் மதிப்பிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஓவியப் போட்டிகள் மட்டுமின்றி மலர்களைக் கொண்டு ஓவியம் உண்டாக்குதல், துணிகளுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...