தீ குளிப்பதாக மிரட்டிய கணவர் எதிர்பாரா விதமாக தீயில் கருகி பலி


கோவை மாவட்டம், ஒக்கிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (36). இவரது மனைவி சென்பகவள்ளி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

பிரபுவிற்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்துள்ளது. இதனால் கணவர், மனைவி இடையே அவ்வப்போது பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று, பிரபு மது அருந்துவதற்காக சென்பகவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததையடுத்து, வீட்டில் இருந்த மண்ணெண்னையை உடலின் மீது ஊற்றிவிட்டு தீ வைத்து பலியாகப் போவதாக பிரபு மிரட்டியுள்ளார். 

இந்நிலையில், அவரது கையில் இருந்த தீப்பெட்டியை அவர் உரசி மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாரா விதமாக தீ பற்றி அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. அவரது சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு கோவை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செட்டிபாளையம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...