முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சாந்தி (53). இவர், கடந்த வாரம் தேவம்பாளையம் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு  வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தியிடம் முகவரி கேட்டனர். சாந்தி தான் ஊருக்கு புதிது என்று சொல்லும் போது, அந்த வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிரக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...