500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு முன்னறிவிப்பின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களிலும் போதுமான தொகை இல்லாமல் பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து செயல்படும் மத்திய பாஜக மோடி அரசைக் கண்டித்து இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உருவப் படத்தை காலணியால் அடித்தும், தங்களது பணப்பையில் இருந்து தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் போன்ற நகல் காகிதத்தை எடுத்து கிழித்து வீசி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...