அழியாத மை வைக்க வேண்டாம்: தேர்தல் கமிஷன் கோரிக்கை

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பழைய நோட்டுக்களை இந்தியா முழுவதும் பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.

திரும்ப திரும்ப நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பணத்தை மாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து நிதித்துறை அமைச்சகம் பணம் எடுக்க வரும் பொதுமக்களின் கையில் பணம் எடுத்ததற்கான அடையாளமாக மை வைக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி நேற்றிலிருந்து கையில் மை வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நிதித்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் ‘‘பல மாநிலங்களில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது. அதனால் பொதுமக்களின் கையில் அழியாத மையை வைக்க வேண்டாம்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முடிவு மத்திய நிதித்துறை அமைச்சகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...