சில்லரை தட்டுப்பாட்டால் கைகலப்பு வாலிபர் கைது

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது (28). வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு நாகராஜ் (30) என்பவர் வந்தார். பொருட்களை வாங்கிய பின் ரூ.500 முகம்மதுவிடம் கொடுத்தார். சில்லரை இல்லை என்று முகம்மது கூறவே, நாகராஜ் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும், முகம்மதுவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து முகம்மது போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் , வழக்கு பதிந்த போலீசார் நாகராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...