அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் பிளின் தேர்வு

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி அந்நாட்டின் 45-வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.

தனது தலைமையிலான மந்திரிசபை மற்றும் நாட்டின் முக்கிய துறைகளுக்கான தலைமை அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுவரும் டிரம்ப், தினந்தோறும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அவ்வகையில், அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் ஃபிளின் என்பவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்துள்ளார். டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான மைக்கேல் ஃபிளின், இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரசார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்து வந்துள்ளார்.

இந்த பதவியை மைக்கேல் ஃபிளின் ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள், ‘நாட்டுக்கு சேவையாற்ற அமெரிக்காவின் அதிபர் உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும்போது, அதற்கு ஒரே பதில் (எஸ், ஸார்) மட்டுமே உண்டு’ என்று தெரிவித்துள்ளன. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...