கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் சிக்கல் - மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் எழுபது டன் உருளைக்கிழங்கு தேக்கம்


கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் எழுபது டன் உருளைக்கிழங்கு விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக் கிழங்குகள் அங்குள்ள விவசாயிகளால் லாரிகள் மூலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டுவரப்படும். தினசரி இப்படி டன் கணக்கில் கொண்டு வரப்படும் இந்த உருளைக் கிழங்குகள் பின்னர் இடைத்தரகர்கள் யாருமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் மொத்த வியாபாரிகளிடம் நேரிடையாக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.

இந்நிலையில் நேற்று முதல் கூட்டுறவு சங்கத்தில் இனி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டவுடன் உருளைக்கிழங்கு விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களின் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கை வாங்க எந்த மொத்த வியாபாரிகளும் வரவில்லை. இதனால் விவசாயிகள் கொண்டுவந்த உருளைக்கிழங்குகள் விற்பனையின்றி தேங்கிவிட்டன. 



இன்று ஒரு நாளில் மட்டும் எழுபது டன் வரை உருளைக்கிழங்கு தேங்கியுள்ளதாகவும், இவை தேங்கினால் அழுகிவிடும் என்பதால் தாங்கள் கடும் இழப்பிற்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், அத்தியாவசிய மற்றும் அழுகும் பொருட்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு தேவை என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...