கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கும் சாக்கடை நீரால் மக்கள் அவதி


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நில அளவை துறை செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வெளியேறி அப்பகுதியிலேயே தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும், சாக்கடை நீரை கடந்து செல்ல மரப்பலகையை தாண்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இங்குள்ள கருவூல அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கருவூல அலுவலக ஊழியர்களும் செய்வதறியாது துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பிரச்சனை, சாக்கடை நீர் வெளியேற்றம், வாகன நிறுத்தம் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...