தண்ணீரை தேடி வந்த புள்ளி மான் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக தண்ணீரினைத் தேடி வன விலங்குகள் வனப்பகுதியினை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் நுழைந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் பெத்திகுட்டையை அடுத்த ஓதிமலை காரனூரில் செவ்வாயன்று இரவு இரண்டு புள்ளி மான்கள் தண்ணீரை தேடி முத்துசாமி என்பவரது தோட்டத்தினுள் புகுந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.



பின்னர், காலையில் விவசாய பணிக்காக சென்ற விவசாயி கிணற்றின் உள்ளே மான்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மான்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதில் ஒரு புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரோடு இருந்த மற்றொரு மானை மீட்ட வனத்துறையினர் ஓதிமலை காட்டு பகுதியில் பத்திரமாக விட்டனர்.

வனவிலங்குகள் தண்ணீரினை தேடி கிராம பகுதிகளில் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...