முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டார்

கோவையில் செயல்பட்டு வரும் கேஎம்சிஎச் மருத்துவமனையில் குமாரசாமி (50) என்பவர் கடும் முதுகு வலியின் காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த இருதய மருத்துவர் ஆர்.சுரேஷ் குமார், குமாரசாமியின் இருதயத்திலிருந்து வெளிவரும் இரத்தக் குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசோதனையில், அந்த விரிசல் மூளை, கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் குடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் வரை பரவி இருப்பதும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது உறுதி என கேஎம்சிஎச் இருதய- நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜயநாத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து குமாரசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நலம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 10 அறுவை சிகிச்சைகள் நூறு சதவிகிதம் வெற்றியுடன் செய்யப்பட்டுள்ளன என்று கேம்எம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...