கணைய அழற்சி சிகிச்சையில் ஜெம் மருத்துவமனை சாதனை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (22). பி.இ. கணினி அறிவியல் பட்டதாரியான இவருக்கு கணையத்தில் அழற்சி ஏற்பட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு கோவையில் செயல்படும் ஜெம் மருத்துவமனையில் கணைய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலைமை மருத்துவர் பழனிவேலு தலைமையில் மருத்துவர்கள் கான், ரமேஷ், திவாகர் ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பின் அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி தற்போது அவர் நல்ல முறையில் உடல் நலம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சி.பழனிவேலு கூறுகையில், ''பித்தப்பை கற்களின் தூண்டுதலால் தான் கணையம் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மது அருந்துதல், வைரஸ் கிருமிகள் காரணமாக கணையம் பாதிக்கப்பட்டு வருகிறது. உரிய தருணத்தில் சரியான சிகிச்சை அளித்தால் கணைய அழற்சியில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடலாம்'' என்றார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...