சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மேலும் ஒரு நகரம் மீட்பு

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் அலெப்போ நகரை ஒட்டி, அல் பாப் பகுதியில் குவாபாசிப் என்னும் சிரியாவுக்கு சொந்தமான நகரத்தை கைப்பற்றி இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு துருக்கி நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வந்தனர்.

இந்த நகரத்தை மீட்பதற்காகவும், ஐ.எஸ். தீவிரவாதிகளை இங்கிருந்து விரட்டுவதற்காகவும் சிரியாவில் உள்ள அஹ்ரார் அல் ஷாம் உள்ளிட்ட உள்நாட்டு குர்திஷ் இனப்போராளிக் குழுக்கள் சமீபத்தில் அதிரடி தாக்குதலை தொடங்கின. துருக்கி ராணுவமும் அவர்களுக்கு துணையாக இருந்தது.

இந்த கூட்டுப்படையினர் நேற்று பின்னிரவு, அல் பாப் பகுதியை ஒட்டியுள்ள குவாபாசிப் நகரத்தை கைப்பற்றி விட்டதாகவும், அல் பாப் பிராந்தியம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் இந்தப் படைகள் முன்னேறி வருவதாகவும், இங்கு முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் புறமுதுகிட்டு ஓடிவிட்டதாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...