50 மைக்ரானுக்கும் குறைவாக பிளாஸ்டிக் பொருள் விற்போர்க்கு அபராதம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் உள்ளிட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் மக்களால் முறையின்றி கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. அவை மக்கும் தன்மை இல்லாததால் சுற்றுப்புறச் சூழலுக்கு அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று உதவி மாநகர நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்களுடன் சுந்தராபுரம் பகுதியிலுள்ள மொத்தமாக பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பை என 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேப்போன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதி பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் திடீர் சோதனை நடத்தப்படும். மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...