கோவை: பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியை - தந்தை போலீசில் புகார்


கோவையில் தனியார் பள்ளியில் மாணவனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதேபகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் கிஷோர் சித்தாப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மேரி ராணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் யு.கே.ஜி பயின்று வருகிறார். 

இந்நிலையில் கடந்த வாரம் கிஷோர் பள்ளியில் உள்ள கழிவறையில் தண்ணீரை கொட்டியதற்காக அவரது வகுப்பு தமிழ் ஆசிரியை ஹன்சன்னி, கிஷோரை அடித்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த கிஷோருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. இதையடுத்து கிஷோரின் தந்தை மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவத்தையடுத்து கிஷோர் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாகவும், ஆசிரியை அடித்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் தந்தை மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சிறு மாணவ, மாணவிகளை இதுபோன்று கொடுமையாக தாக்கிய ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...