சொத்துவரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவற்றை கட்டாதவர்கள் மீது நடிவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். 

அதனடிப்படையில், கோவை மாவட்ட கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டு, மசக்காளிபாளையம் சின்னசாமி வீதியில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவர் சொத்துவரி 46 ஆயிரத்து 682 செலுத்தாமல் இருந்துவந்துள்ளார். அவரது வீட்டின் குடிநீர் இணைப்பும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட போத்தனூர் மணிகண்டன், திருமால்வேந்தன் சொத்து வரி 53 ஆயிரத்து 790 ரூபாய் செலுத்தாததாலும் அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதேப்போன்று கோவை வடக்கு பகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் செயல்படும் யுனிவர்சல் மிஷினரி ஒர்க்ஸ் சொத்து வரி ரூ.8 ஆயிரத்து 386 மற்றும், ரூ.10 ஆயிரத்து 721 செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு அவர்தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...