அமிர்த் சிறப்பு மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி மாணவர்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அமிர்த் சிறப்பு மையத்தில் உள்ள குழந்தைகளோடு இணைந்து குழந்தைகள் தினவிழா கொண்டாடினர். 



பேப்டிஸ்ட் அகாடமி பள்ளியின் முதல்வர் டேனியல் கூறுகையில்:-
குழந்தைகள் தினவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் பள்ளி மாணவர்கள் இந்த வருடம் குழந்தைகள் தின விழாவினை அமிர்த் சிறப்பு மையத்தில் இவர்களுடன் கொண்டாடுகின்றனர். இவர்களை புரிந்து கொண்டு இவர்களுக்கு உதவி செய்வது மூலம் மாணவர்கள் பல்வேறு நல்ல செயல்களை கற்றுக்கொள்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு கற்பிக்கப்டும் பல்வேறு பயிற்சிகள் மூலம் இக்குழந்தைகள் சிறந்து விளங்குகின்றனர். இந்த குழந்தைகளின் திறமை மிக்க செயல்களை பார்த்து எங்கள் பள்ளி மாணவர்களும் பல்வேறு நற்செயல்களை இவர்கள் மூலம் கற்றுக்கொள்வது பயனளிக்கும் விதமாகவும் இருக்கும் என்றார்.



அமிர்த் சிறப்பு மையத்தின் முதல்வர் நளினி ஜெயபிரகாஷ் கூறுகையில்:-
அமிர்த் சிறப்பு மையம் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி செய்யும் விதமாக இம்மையம் தொடங்கப்பட்டது. இம்மையம் துவங்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இம்மையத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது உடையவர்கள் வரை உள்ளனர். 50 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இம்மையம் தற்போது 140 மாணவர்கள் கொண்டு செயல்படுகிறது. இம்மையத்திற்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனவர்கள் பல்வேறு உதவிகள் செய்து  வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களின் வயதுக்கும் கற்றல் திறனுக்கும் ஏற்ப பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு பயிலும் மாணவர்களுக்கு சுயசார்பு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி, ஆரம்ப கல்வி, பிசியோதெரபி, பேச்சு திறன் போன்றவற்றை வழங்கபடுகிறது.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...