மாடியில் இருந்து தவறி விழுந்து பத்திரிகையாளர் மரணம் சக பத்திரிகையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரிப்பு

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் யாழ்முடி நாதன் என்கிற கவுதம் (27). இவர் லோட்டஸ் மற்றும் மூண் தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கடந்த வாரம் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு சென்றார். திருமணம் முடிந்து சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு, எதிர்பாராத விதமாக வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 



இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுதம்-ன் உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

தற்போது கவுதம்-ன் உடல், அவரது சொந்த ஊரான கோவைக்கு கொண்டுவர உள்ளது.  இது குறித்து தகவலறிந்த கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று காலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரித்துள்ளனர். 



உடன் பணியாற்றிய  பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சக பத்திரிக்கையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...