உலக நீரிழிவு தினம் முன்னிட்டு கே.எம்.சி.எச் மருத்துவமனை சிறப்பு முகாம்

உலக நீரிழிவு தினமானது, சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைமையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 415 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கையின்படி 5,42,000 சிறுவர், சிறுமியர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த நீரிழிவு நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இந்நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை 12.11.2016 அன்று கோவை ரேஸ்கோர்ஸ்-ல் நடத்தியது. இதில் அப்பகுதியைச் சார்ந்த மக்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மற்றொரு அங்கமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்களால் விவரிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிவஞானம், கிருஷ்ணன் ஸ்வாமிநாதன், வேலாயுதம் ஆகியோர் விளக்கமளித்தனர்.



இம்முகாமினை கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன்  துவக்கி வைத்தார். இம்முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பொது மக்கள் பயன்பெறும் வகையில் இவ்வாறான விழிப்புணர்வு முகாம்களை கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை தொடர்ந்து நடத்தும் என மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்தார்.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...