உத்தரபிரதேசத்தில் ஒரு கிலோ உப்பின் விலை ரூ 200 முதல் 400 வரை

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் அம்மாநிலத்தில் ஒரு கிலோ உப்பு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.சில இடங்களில் ரூ 400 வரை விற்கபடுகிறது

உத்தரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்,இன்றே வாங்கி இருப்பு வைக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது எனவும் தகவல்கள் பரவின.

இதனால் பயந்து போன மக்கள் உப்பு வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். உப்பு தட்டுப்பாடு குறித்த பயத்தினால் மக்கள் அதிகளவு உப்பை வாங்கிக் குவிப்பதை அறிந்த சில வியாபாரிகள், ஒரு கிலோ உப்பை 200 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளனர்.

வடக்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் லக்னோ, அலகாபாத், மொராதாபாத் ஆகிய இடங்களில் இந்த அநியாய விலைக்கு உப்பு விற்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் வெறும் வதந்தி எனவும், இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. ”உத்தரபிரதேசத்தில் உப்புக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை.உப்பை அதன் உண்மையான விலையைவிட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்கக் கூடாது. இது தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.” என உத்தரபிரதேச காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் காட்டுத்தீ போல பரவிய இந்த தகவலையடுத்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளரான ஹெம் பாண்டே,”நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது வெறும் வதந்தி. மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

”சில பேர் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதாக புரளியை கிளப்புகின்றனர். இது முற்றிலும் தவறான தகவல்.” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் உப்பு வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, அந்தந்த பகுதி காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...