77-வது வார்டில் கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெற்கு மண்டலம், 77-வது வார்டுக்குட்பட்ட சொக்கம்புதூர் பகுதியில் பொது மக்களுக்கு கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளையும், சொக்கம்புதூர் மின் மயானத்தில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மருத்துவமனையும், அங்குள்ள வரி செலுத்தும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி 77, 79 ஆகிய வார்டுக்குட்பட்ட பொன்னையராஜபுரத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வருகை பதிவை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக பயோமெட்ரிக் பயன்படுத்தும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை ஆய்வு செய்யும் விதமாக 86-வது வார்டு, செல்வபுரம் நகர்நல மருத்துவ மையத்தில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.  

இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் அனைத்து வரி செலுத்தும் இடங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து மேற்கு மண்டல அலுவலகத்திலுள்ள வரி செலுத்தும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி, உதவி ஆணையர் (வருவாய்) ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...