இன்றே இந்த ஆஃபர் கடைசி.. பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை கொடுத்து இன்று மட்டும் மின்சார பில் கட்டலாம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்சார கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளாட்சித்துறைகள் உட்பட அரசு அலுவலகங்களில் கட்ட வேண்டிய வரி மற்றும் அபராத கட்டணத்தை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்துவோர் இன்று மட்டும் (அதாவது, நவம்பர் 11ம் தேதி) இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நவம்பர் 9ம் தேதி மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி நாளாக இருந்தவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த கால நீட்டிப்பு தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...