மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணம் தள்ளுபடி


புதுடில்லி: புதிய ரூபாய் நோட்டுகள் எடுப்பதற்காக கூட்ட நெரிசலை தவிர்க்க மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளன. இதனால் வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்ததை அடுத்து இன்று முதல் அனைத்து ஏடிஎம்-களும் பயன்பாட்டுக்கு வருகின்றன.

அந்த ஏடிஎம்-களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை எடுத்துக் கொள்ள முடியும். இதனால் சில தினங்களுக்கு ஏடிஎம்-களில் அதிக கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், முக்கியமான ஏடிஎம்-களில் கூட்டத்தை தவிர்க்க மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்-களை 5 முறை வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.

அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கு தனிகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு மத்திய அரசு மற்ற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...