அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை ஆறு மணி நேரத்தில் மீட்பு அசத்திய கோவை போலீஸ்!



கோவை சிங்காநல்லூர்  வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜன், ஜோதி தம்பதிகளுக்கு கடந்த 8 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோதிஅரசு மருத்துவமனையில் உள்ள பிரசவத்திற்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடன் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் எனக்கூறி அர்ச்சனா என்பவரும் வார்டில் இருந்து வந்துள்ளார். தனது குழந்தை ஐசியூவார்டில் இருப்பதாக அர்ச்சனா கூறி வந்ததாக தெரிகிறது.



இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மருத்துவரை பார்க்க சென்ற ஜோதி தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அருகில் இருந்த அர்ச்சனாவிடம்கூறிச்சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது அர்ச்சனாவும் குழந்தையும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார்.இதையடுத்து காவல்துறையினர்  சிசிடிவி கேமாராவின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, இதில் காரின் மூலம் கடத்தப்பட்ட கால் டாக்சி ஒட்டுனரான அசோக் என்பவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் துடியலூர் பகுதியை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அவர்களை இறக்கி விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து கார் ஒட்டுனரை அழைத்து சென்று அப்பகுதி பார்த்த போது வீட்டில் குழந்தை இருப்பதை கண்டு அவர்களிடம் விசாரிணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து நரேஷ் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா, அவருடைய அம்மா பேபி, அப்பா ராமலிங்கம் மற்றும் நரேஷின் அம்மா கோமதி ஆகியோரை கைது செய்து பந்தைய சாலையில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைபற்றப்பட்ட குழந்தையை அவருடைய தாயார் ஜோதியிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 நாளான ஆன பச்சிளம் குழந்தையை கடத்தப்பட்டு 6 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  





Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...