45வது அதிபர் டிரம்புக்கு மோடி, தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: புதிய அதிபராக வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா-அமெரிக்கா உறவு புதிய வரலாறு படைக்கும்.

பிரதமர் மோடி: அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்கா உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல இணைந்து செயல்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பிரசாரத்தின் போது இந்தியாவை பற்றி உயர்வாக பேசியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போதைய அதிபர் ஒபாமா: புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெள்ளை மாளிகைக்கு இன்று வரும்படி வரவேற்கிறேன். இதன்படி, டிரம்ப் இன்று வெள்ளை மாளிகைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சிக்கலான நிலையில் உள்ள அமெரிக்கா-ரஷ்யா உறவு இனிமேல் மேம்படும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே: கடின பிரசாரத்திற்கு பின் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யும் டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இருநாடுகளும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களிலும் இந்த நட்பு தொடரும் என நம்புகிறேன்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்: ஜனநாயக முறைப்படி ஜெர்மனியும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும். புதிய அதிபர் டிரம்ப்புடன் இணைந்து செயலாற்றும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூகாங்: புதிய அமெரிக்க அதிபர் தலைமையில் இருநாட்டு உறவுகள் மேம்படும் என்று நம்புகிறோம். 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்: நீங்கள் பெற்றுள்ளது சரித்திர வெற்றி. அமெரிக்க மக்கள் விடுதலை, ஜனநாயகம், மனித உரிமை மீது நம்பிக்கை வைத்து உங்களை தேர்வு செய்துள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின்: அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்புடன் இணை்ந்து செயல்பட காத்து இருக்கிறோம்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...