மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் சிறப்பு பேட்டி!


சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமெனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் இணையதளம் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு மையத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், வழிபாட்டு உரிமை அனைவருக்கும் உண்டு என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என தெரிவித்தார். ஆனால் சில வழிப்பாட்டு தளங்களில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அனைத்து தரப்பு மக்களுக்கான வசதியாக இருக்க வேண்டுமென்ற வழிமுறை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமென என கூறிய அவர், அப்படி கேட்கப்படாமல் கேரள அரசு திடீர் முடிவு எடுப்பது எந்த வகையில் பொருந்தும் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விரும்பதகாதது என கூறிய அவர், மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே விவசாயிகள் பிரச்சணைகளுக்கு தீர்வு காண முடியுமென தெரிவித்தார். 

பொது சிவில் சட்டம் மதம் சார்ந்த கருத்து அல்ல எனவும், அனைத்து பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே பாஜகவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி பிரச்சணையை அரசியலாக்கி இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்பட்டு கர்நாடக அரசு கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தலை சந்தித்து ஆட்சி பிடிக்க முயல்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...