500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த பிரதமர்- திமுக வரவேற்பு


நாட்டின் பொருளாதாரத்தை மனதில் வைத்து சீர்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடைசெய்துள்ள நடவடிக்கையினை திமுக வரவேற்பதாக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் ஸ்டாலின் வருகைபுரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

''நாட்டின் சீர்திருத்தத்தை மனதில் வைத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திமுக வரவேற்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கருப்புப் பணத்தை மீட்டு சாமானியர்களின்  வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது ?. பொது மக்களுக்கு உரிய காலவகாசம் வழங்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அறிவிப்பு வெளியான போது பெட்ரோல் பங்க், பாலகம், மருந்தகங்களில் 500, 1000 ரூபாய் வாங்கப்படும் என தெரிவித்திருந்தாலும் தற்போது எங்கேயும் அந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதைப்போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...