இந்திய விமானத் துறையின் சார்பில் லஞ்ச ஒழிப்பு வார விழா

ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் சார்பில் கோவை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கோவை விமான நிலையத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த விழாவில் கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா, சுகுனா பிப் பள்ளி, கே.சி.டி, ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பெருந்திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பரிசுகள் வழங்கும் விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இதனிடையே, மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்றபோது வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை, கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி, ஜெஜிஎம் (ஏடிஎம்) வி.பிரதீப் குமார், டிஜிஎம் (சிவில்) ஆர்.குல்ஸ்ரெஸ்தா உள்ளிட்ட அனைத்துறை தலைவர்களும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...