கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே ரூ.6 லட்சம் கொள்ளை- விசாரணை


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. பவர்லூம் மற்றும் நிலவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பத்திரப் பதிவுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பத்திரப் பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது, தனது காரை ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்தியுள்ளார். பத்திரப் பதிவு பணிகள் முடித்துவிட்டு காரை நோக்கி வந்த போது காரின் கண்ணாடி வெட்டப்பட்டு உள்ளே இருந்த 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.



இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு பாதுகாப்பின் கீழ் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே எந்நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், பட்டப்பகலில், காரின் கண்ணாடியை நேர்தியாக வெட்டி பணம் கொள்ளையடித்திருப்பது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...