என்டிடிவி ஒருநாள் தடை விவகாரம்: டிச.5 வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவு

மத்திய அரசு விதித்த ஒருநாள் தடைக்கு எதிரான என்டிடிவி இந்தியா நிறுவன மனு மீதான விசாரணையை நடத்த டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

அதாவது, மத்திய அரசே தடை குறித்து மறுபரிசீலனை செய்யவிருப்பதால் டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு கூறும்போது, “தடை ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் ஊடகங்களில் வாசித்தோம்” என்றார்.

தடை உத்தரவு இருக்கும் போதுதான் திங்களன்று என்.டி.டிவி நிறுவமனம் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. ஆனால் நேற்று மாலையே தடையை நிறுத்தி வைத்ததாக அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டது.

அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி நீதிபதிகளிடம் கூறும்போது, என்.டி.டிவி பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்ததாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து டிசம்பர் 5-ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, அமைச்சர்கள் குழுவில் என்.டி.டிவி மீண்டும் ஒருமுறை தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம் என்று நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், அரசே தடையை நிறுத்தி வைத்துள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...