அரசுப் பேருந்து மோதி பெண் பலி

கோவை பாலக்காடு மெயின் ரோடு பகுதியில் உணவு விடுதி நடத்தி வருபவர் முனிராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி. செவ்வாயன்று (இன்று) காலை பொருட்கள் வாங்குவதற்காக புவனேஷ்வரி, தனது அண்ணன் மகன் மோகன்தாஸுடன் இரு சக்கர வாகனத்தில் குனியமுத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி புவனேஷ்வரி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் இவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அரசு பேருந்து மோதி பெண் இறந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மாநகராட்சியின் சார்பில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் வாகனங்களால் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...