மருதமலை அருகே சிறுத்தை நடமாட்டம் பதிவு- பொதுமக்கள் அச்சம்

மருதமலை அருகே சிலகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிவதாக வனத்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், அங்கு சிறுத்தையின் காலடித் தடத்தை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நீர்குட்டை ஒன்றின் அருகே கண்காணிப்பு கேமிராவும், கூண்டும் பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரு சிறுத்தைகள் இறந்த விலங்கின் உடலை இழுத்துச் செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் அந்த சிறுத்தைகளை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் மருதமலை பகுதியில் சிறுத்தைகள் சுற்றிவருவது அப்பகுதி மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...