குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை- கல்வி பாதிப்பதாக பள்ளி மாணவிகள் மனு

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தி அப்பகுதியில் செயல்படும் பள்ளியில் கல்வி பாதிப்பதாகவும், மேலும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறச்சொல்லி மிரட்டி வருவதாகவும் பள்ளி மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சுகுணா பெப்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் தன்யா, ஜிடி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் நிவேதா ஆகிய பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிறுப்பதாவது:-

''ஏ.செல்வி, தன்யா, நிவேதா ஆகிய நாங்கள் உப்பிலிபாளையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா நகர், ஹரி ராம் வீதியில் வசித்து வருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது இந்த வருட படிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் எங்களுடைய வீட்டை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியப்பன் என்பவர் அவருடைய நிலத்தை அரசன் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வரும் அரசகுமாரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாடகைக்கு விட்டார்.

மேற்படி தொழிற்சாலை வந்த பிறகு எங்களது நிம்மதி முற்றிலும் தொலைந்து விட்டது. கால நேரம் இல்லாமல் இரவு நேரங்களிலும் மேற்படி நபர்கள் வேலை செய்கின்றனர். அந்த தொழிற்சாலையில் இருந்து 110 டெசிபலுக்கும் மேலாக ஒலி ஏற்பட்டு எங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், இரவு நேரங்களில் உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். எனது தந்தை பாலசுப்பிரமணியன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதால் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணியளவில் தான் வீடு திரும்புவார். வேறு ஆண்கள் யாரும் எங்களது குடும்பத்தில் இல்லாததால் நாங்கள் மேற்படி நபர்களை அணுகி இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வேலை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அந்த இடத்தின் உரிமையாளர்களும், அவர்களது உறவினர்களும் எங்களது வீட்டினை காலி செய்துவிடுமாறு மிரட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உனடடியாக மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி மேற்படி நிறுவனங்களை நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...