ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி

கிர்குக்: ஈராக்கில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். மேலும், 50 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் மொசூல் நகரை மீட்பதற்காக அரசு படைகளுக்கும், அதை தக்க வைப்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான சண்டை  நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக் அரசு படைகள் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள திக்ரித் மற்றும் சமரா நகரங்களில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

திக்ரித் நகரின் நுழைவு வாயில் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். இதேபோல் சமரா நகரில் கார் பார்க்கிங்கில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...