என்டிடிவியை தொடர்ந்து மேலும் 2 சேனல்களுக்கு தடை

புதுடெல்லி: என்டிடிவி இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதன்கோட் தாக்குதலை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனலுக்கு நவம்பர் 9ம் தேதி ஒரு நாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேசிய நலனை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரண்டாவது எமர்ஜென்சியை போல பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் என்டிடிவியை தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அசாமில் உள்ள நியூஸ் டைம் அசாம் என்ற சேனலுக்கும், கேர்வேர்ல்டு டிவி என்ற சேனலுக்கும் அதே 9ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை ஒருநாள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆணையை கடந்த 2ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...