தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுங்கள்: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய சுற்றுப் புறச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ் தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் அடங்கும். அண் மைக் காலமாக என்சிஆர் பகுதியில் காற்று அதிகமாக மாசு அடைந்து வருகிறது. இதற்கு, அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் உள்ள அனல் ஆலைகளிலிருந்து வெளிவரும் சாம்பல், பயிர்கள் தீயில் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் உள்ளன. இதனால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கிறது.

இதே நிலை நீடித்தால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர்களுடனான சந்திப்பை நேற்று முன்தினம் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் நடத்தியது. அந்த கூட்டத்தில், என்சிஆர் பகுதியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க 5 மாநில அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பயிர்களை எரிப்பது, மாசு ஏற்படுத்தும் செங்கல் ஆலைகளை மூடுதல், அனல் ஆலைகளிலிருந்து சாம்பல் வெளியேறுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் சாலைகளில் தூசி பிரச்சினையை திறம்படகையாளுதல் போன்ற நடவடிக்கைகளை 5 மாநிலங்களும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.

காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில் ஆலைகளை இயக்குமாறு என்டிபிசிக்கு விரைவில் கடிதம் எழுதபோவதாக கெஜ்ரிவால் அரசு தெரிவித்தது. மேலும், காற்று மாசினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தும் படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மத்திய அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், ஒவ்வொரு காலாண்டும் காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...