5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு  மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மதுபான கூடம் ஓன்றில் மது அருந்திக்கொண்டு இருந்த இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பெருமாள் மற்றும் சீனிவாசன் என்பவர்களை மற்றொரு குழுவை சேர்ந்த நாகேந்திரன், வீரன், விஜி, மணி, சந்தோஷ்,ராஜன்,செந்தில் ஆகிய ஏழு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.அப்போது அவர்கள் பெருமாளையும் சீனிவாசனையும் கத்தியால் குத்தியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.சீனிவாசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த வழக்கில் 7 பேரையும் துடியலூர் போலிசார் கைது செய்தனர்.இந்த வழக்கு கோவை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் செந்தில், மணி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் அவர்கள் இருவரையும் விடுவித்த நீதிபதி கார்த்திகேயன், மற்ற 5 பேரான நகேந்திரன்,விஜி,வீரன்,ராஜன், சந்தோஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்திரவிட்டார்.கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...