நாட்டில் வேறு விவகாரங்கள் இல்லாததால் முன்னாள் இராணுவத்தினர் விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் குற்றம்சாட்டியுள்ளார்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமானம் மூலம் வருகை தந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.கவினர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர் கோவையில் கல்வி தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருப்பதாகவும் சென்னையிலும் ஓரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் தரமான கல்வி என்பதே பா.ஜ.க வின் கொள்கை எனக்கூறிய அவர் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது தொடர்பாக தமிழக கல்விதுறை உள்ளிட்ட அனைத்து மாநில கல்வி துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஓரே பதவி ஓரே ஒய்வூதியம் என்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கையை  40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நிராகரித்தாக குற்றம்சாட்டிய அவர் ஆனால் பா.ஜ.க அரசு இந்த திட்டதிற்கு 6500 கோடி ஓதுக்கி இருப்பதாகவும் கூறினார். நாட்டில் வேறு விவகாரங்களை எழுப்ப முடியாது என்பதால் இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...