காந்திபுரம் வணிக சாலையை சீர் செய்யக்கோரி தேமுதிக புகார்


காந்திபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கக் கோரி தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான காந்திபுரம் 5 முதல் 9 வது வீதி, நேரு வீதி, லஜபதிராய் வீதி, விவேகானந்த வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நிலத்தடியில் மின்சாரக் கம்பி புதைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வரை மிக மந்தமான நிலையிலும், பணிகள் முடிந்த பகுதிகளில் சாலை சீரமைக்கப்படாமலும் மேற்கண்ட பகுதிகளில் மிகமோசமான நிலையில் சாலைகள் காணப்படுகின்றன. 

நகரத்தின் முக்கிய பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் இருக்கும் காந்திபுரத்திற்கு நாள்தோரும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். மேலும் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குண்டும், குழியுமான இச்சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...