கட்டிட கழிவுகளை அகற்ற உதவி சேவை மையத்தை '8190000400' மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்!


கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையத்தையும், அதற்கு பயன்படுத்தக்கூடிய கட்டிட கழிவுகளை அகற்றும் வாகனங்களையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து, க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்த சிறப்பு திட்டங்களில் ஒன்றான கட்டிட கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டம் இதுவாகும். இதனை செயல்படுத்தும் விதமாக கோவை மாநகராட்சியில் கட்டிட கழிவுகளை அகற்றுவதற்கான உதவி சேவை மையம் 8190000400 என்ற தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டிட கழிவுகளை அகற்றும் பணிகளில் 3 வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக பொதுமக்கள் வீடுகள் கட்டும் பொழுதும், வீடுகள், கட்டிடங்களை இடிக்கும் போதும் கட்டிட கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டிடக் கழிவுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் இந்த 8190000400 எண்ணிற்கு தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இக்கட்டிட கழிவுகளைக் கொண்டு மறுசுழற்சியாக செங்கற்கள், பேவர் பிளாக்ஸ் மற்றும் எம்-சேன்ட் போன்றவற்றை தயார் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...