கோவையில் காதலியை தாக்கிய காதலன் கைது

திருமணம் செய்ய மறுத்த காதலியை பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயே கண்ணாடி பாட்டிலால் காதலன் 

தாக்கியதைத்தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிவில் பொறியியல் பட்டதாரி இளைஞரான வேம்புராஜ் என்பவருக்கும், கனகலட்சுமி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்துவரும் கனகலட்சுமியைக் காண வேம்புராஜ் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என வேம்புராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கனகலட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த வேம்புராஜ் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலால் கனகலட்சுமியின் கழுத்தில் பலமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கனகலட்சுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வடவள்ளி காவல் துறையினர் வேம்புராஜின் மீது பெண் வன்கொடுமைச் சட்டம், தமிழ்நாடு மகளிர் துண்புறுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...