ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகனம் நிறுத்துவது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆர்.எஸ்.புரம் சாலையோரத்தில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் புதனன்று (இன்று) நடைபெற்றது.



இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் முதற்கட்டமாக ஒத்திகையாக ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மாதங்களில் வாகனங்கள் நிறுத்துவது நடைமுறைக்கு வருகிறது. மாநகராட்சி சார்பாக சாலைக் குறியீடு அமைத்தல், சாலையோரம் இருபுரங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும். சாலையோர பணிகளில் ஈடுபடும் போது காவல் துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் கூறினார். 

இக்கூட்டத்தில், காவல் உதவி ஆணையர் மகுடபதி, வியாபார நிறுவன உரிமையாளர் அன்னபூரணா சீனிவாசன், ரவிசாம், ஹேமா கண்ணா, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...