சிறுவாணி அணை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவுக்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு

கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

''சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது 

வரவேற்கத்தக்கது. கேரள அரசு மீண்டும் சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் முயற்சி மேற்கொள்ளுமானால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு தைல மரங்கள் நட டி.என்.பி.எல் காகித நிறுவனம் முயற்சித்துவருவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முயற்சி கைவிடப்பட வேண்டும். இம்முயற்சி தொடருமானால் மக்களை திரட்டி தனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.

மேலும், கேரளாவில் இருந்து கோவைக்குள் மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைத்து எல்லைச் சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் நட்பின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்'' என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...