டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் கோவை மாநகராட்சி தீவிரம்!


கோவை மாவட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் சாலை, குமாரசாமி காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது கழிப்பிடக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் புதனன்று நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, 22 வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனைத்தொடர்ந்து, தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும், குப்பைத்தொட்டிகளை பராமறிப்பது குறித்தும் அவர் பார்வையிட்டார். 

இதையடுத்து கோவையில் சில காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தார். இதில், ஆர்.எஸ்.புரம், கௌலிபிரவுன் சாலை, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...