சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது


கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை அடுத்த தம்பிக்கவுண்டர் தோட்டப் பகுதியில் செவ்வாயன்று மர்மநபர் ஒருவர் சந்தன மரத்தினை வெட்டி கடந்த முயற்சித்துள்ளார். அவரைப் பிடித்த பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் ராமசாமி (23) என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் சந்தன மரக்கடத்தலில் நாகராஜ் என்பவரும் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து நாகராஜின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அங்கு பதுக்கிவைத்திருந்த இரு பெரிய சந்தன மரக்கட்டைகளை கைப்பற்றினர். பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, ராமசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே கோவைப்புதூர் பகுதியில் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...