பள்ளி மாணவன் உட்பட இருவர் மாயம்

கோவை மாவட்டம், ராயப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் லோகவாணி (18). இவர் செவ்வாயன்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். பின் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகாலட்சுமி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. இவருக்கு முருகேசன் மற்றும் ராஜேந்திரன் (32) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனுக்கு கடந்த 6 மாதம் முன்பு ஜானகி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற ராஜேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து, அவரது அண்ணன் முருகேசன் பெரியநாயக்கன்பாளைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போன்று ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், பிரியா தம்பதியரின் மகன் தன்ராஜ் (14). விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று காலை விடுதி காப்பாளர் தன்ராஜின் அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லாததைக் கண்டு பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆனைமலை காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...