கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலசாமி. இவரது மனைவி பாலமணி (57). செவ்வாயன்று சமத்தூர் பகுதியில் உள்ள ஜோதிமுத்து தோட்டத்தில் ஆடுகளுக்கு உணவு சேகரிப்பதற்காக பாலமணி சென்றுள்ளார். இவருடன், பாக்கியம் (50), மல்லிகா (45) ஆகியோரும் சென்றுள்ளனர். அங்கு ஒரு மரத்தில் இலை பறித்துக்கொண்டிருந்த போது அருகில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றில் பாலமணி தவறிவிழுந்துள்ளார். இவரைக் காப்பாற்ற பாக்கியமும், மல்லிகாவும் கிணற்றில் குதித்துள்ளனர். 

இந்நிலையில், மூவரும் நீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற சிலர் கிணற்றில் இருவரின் உடல் மிதப்பதைக் கண்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மிதந்துகொண்டிருந்த பாலமணி மற்றும் பாக்கியத்தின் உடலை மீட்டனர். கிணற்றின் அடியில் சிக்கியிருந்த மல்லிகாவில் உடல் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து கோட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...