ஒபாமா மனைவிக்கு அமைச்சர் பதவி: சொல்கிறார் ஹிலாரி கிளிண்டன்

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால், தற்போதைய அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவுக்கு, அமைச்சர் பதவி வழங்க தயாராக இருக்கிறேன்,'' என, அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் 8ல் நடைபெறவுள்ளது; இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இருவரும், இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிலாரி கிளிண்டனின் பிரசார கூட்டங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் பங்கேற்று, ஆதரவு திரட்டி வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற பிரசாரத்தில், மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதையடுத்து, மிச்சேலுக்கு அமைச்சர் பதவி அளிக்க, ஹிலாரி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹிலாரி கூறியதாவது: ஒபாமா, அதிபராக பதவி வகித்துள்ள எட்டு ஆண்டுகளில், அவரது மனைவி மிச்சேலின் பணிகள் முக்கியமானவை; அரசு நிர்வாகத்தில் ஒபாமாவுக்கு உதவியாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி, பெண் கல்வி உள்ளிட்டவற்றில் மிச்சேல் ஆர்வமுடையவர். அதிபராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டால், மிச்சேலுக்கு அமைச்சர் பதவி வழங்க தயாராக உள்ளேன்; அவர் தயாராக இருந்தால் முக்கிய அரசு பொறுப்புகளை ஏற்று பணியாற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பதிலுக்கு பதில் பதவி:

அமெரிக்க அதிபராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பில் கிளிண்டன் பதவி வகித்த போது, அவரது மனைவியான ஹிலாரி, அரசு பணிகளில் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, அதே ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமா, முதன்முறை அதிபரானவுடன், வெளியுறவு அமைச்சர் பதவியை ஹிலாரிக்கு வழங்கினார். ஜனநாயக கட்சியின் தற்போதைய வேட்பாளர் ஹிலாரி, ஒபாமாவின் மனைவி மிச்சேலுக்கு அமைச்சர் பதவி வழங்க முன் வந்துள்ளார்.

டிரம்ப் முன்னிலை:

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக, 'ஏ.பி.சி., நியூஸ்' நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், டிரம்ப்புக்கு, 46 சதவீதம் பேரும், ஹிலாரிக்கு, 45 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், முதன்முறையாக, ஹிலாரியை விட, டிரம்ப் கூடுதலாக, ௧ சதவீத ஆதரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...